எகிப்து துப்பாக்கி சண்டையில் 10 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ:

எகிப்து நாட்டின் மராஹா நகரில் துப்பாக்கி முனையில் வங்கியைக் கொள்ளையடித்த 4பேர் கொண்ட கும்பலுக்கும், காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2கொள்ளையர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

மராஹா நகரில் நான்கு பேர் அடங்கிய ஒரு கும்பல் ஒரு காரில், நவீன ரகதுப்பாகிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஒரு சதுக்கம் அருகே வந்தபோது, அங்கிருந்தவங்கி ஒன்றுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் இவர்களைப் பார்த்ததும் வங்கிக்காவலர்கள், கதவை மூடி விட்டனர்.

இதையடுத்து அக்கும்பல் காரிலிருந்து இறங்கி துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒருபோலீஸ்காரரும், 2 பாதசாரிகளும் உயிரிழந்தனர்.

பின்னர் அருகிலிருந்த எகிப்து தேசிய வங்கிக்குள் இக்கும்பல் புகுந்தது. அங்குநுழைந்ததும் சரமாரியாக சுட்டனர். இதில், 2 போலீஸ்காரர்கள், 2 வங்கி ஊழியர்கள்இறந்தனர். காவலர்கள் திருப்பிச் சுட்டதில் 2 கொள்ளையர்கள் இறந்தனர்.

7 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஒருவர்பின்னர் இறந்தார். உயிர் தப்பிய 2 கொள்ளையர்களும் வங்கியிலிருந்து சிறிதுபணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். அவர்கள் எவ்வளவு பணத்தைக்கொள்ளையடித்துக் கொண்டு தப்பினார்கள் என்று தெரியவில்லை.

துப்பாக்கிக் கும்பல் யார் என்று தெரியவில்லை. தப்பி ஓடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். அவர்கள் முஸ்லீம் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.

எகிப்தில் முஸ்லீம் தீவிரவாதிகள் அடிக்கடி வங்கிகள் மற்றும் நகைக் கடைகளில்கொள்ளையடித்துச் செல்வது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் கடந்த 3ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருந்து வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+