பிரபாகரன் பிறந்த நாளில் கொளத்தூரில் மாநாடு
சேலம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளன்று தி.க. விலிருந்துநீக்கப்பட்ட கொளத்தூர் மணி, மனித உரிமைக் கமிஷனைக் கண்டித்து மாநாடுநடத்துகிறார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பில் பங்கு கொண்ட கொளத்தூர் மணி, தி.கவில் இருந்துவந்தார். வீரப்பனைச் சந்திக்கச் சென்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று இயக்க பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியிருந்தார். இதையடுத்துதி.கவிலிருந்து கொளத்தூர் மணி விலகினார்.
தற்போது மணியின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு மனித உரிமைக் கமிஷனுக்குஎதிராக மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த மாநாடு பிரபாகரனின் பிறந்தநாளான நவம்பர் 26ம் தேதி கொளத்தூரில் நடக்கவுள்ளது.
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் கொளத்தூர் மணியால்,திருச்சியில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது. எனவே, தி.க விலிருக்கும்தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்ட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாகஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.க பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதில் கலந்து கொள்ள தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறனை அழைக்கவும்முடிவு செய்துள்ளார்.
மாநாட்டில், வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப்படை வீரர்களால்பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை பாதுகாக்கத் தவறியதாக மனித உரிமைக்கமிஷனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.












Click it and Unblock the Notifications