பெட்ரோல் விலையும் குறைக்கப்பட வேண்டும் ..ஜெ.
சென்னை:
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி. கேஸ்) மற்றும் மண்ணெண்ணை விலையை மட்டும்குறைத்தால் போதாது, பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் மத்திய அரசுகுறைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கேஸ் விலை குறைப்பு தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
கேஸ் விலைக் குறைப்பு வரவேற்புக்குரியதே. இருப்பினும் காஸ் சிலிண்டர் விலைமுதலில் ரூ. 40 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, மண்ணெண்ணை விலைலிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டது. பின்னர் இதை காஸ் ரூ. 10 ஆகவும்,மண்ணெண்ணை விலை ரூ. 1 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்துடைப்புநடவடிக்கையே.
ஏற்றப்பட்ட விலையைக் குறைக்க அதிமுக நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்தவெற்றியே இந்த விலைக் குறைப்பு.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications