பெட்ரோல் விலையும் குறைக்கப்பட வேண்டும் ..ஜெ.
சென்னை:
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி. கேஸ்) மற்றும் மண்ணெண்ணை விலையை மட்டும்குறைத்தால் போதாது, பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் மத்திய அரசுகுறைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கேஸ் விலை குறைப்பு தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
கேஸ் விலைக் குறைப்பு வரவேற்புக்குரியதே. இருப்பினும் காஸ் சிலிண்டர் விலைமுதலில் ரூ. 40 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, மண்ணெண்ணை விலைலிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டது. பின்னர் இதை காஸ் ரூ. 10 ஆகவும்,மண்ணெண்ணை விலை ரூ. 1 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்துடைப்புநடவடிக்கையே.
ஏற்றப்பட்ட விலையைக் குறைக்க அதிமுக நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்தவெற்றியே இந்த விலைக் குறைப்பு.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
யு.என்.ஐ.