இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிஷன் சிங் பேடி வாழ்த்து
டெல்லி:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நிச்சயம், மகளிர் உலகக் கோப்பையை வெல்லும்என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அடுத்த வாரம் நியூசிலாந்தில்துவங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத்தெரிவிக்கும் வகையிலான குட்லக் பேனர் இந்திய மகளிர் அணியிடம் வழங்கும்நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஆடவர் அணியை விட மகளிர் அணி மிகச் சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கைஎனக்கு உண்டு.
இந்திய மகளிர் அணி மிக சிறப்பாக உள்ளது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.தங்களது சொந்த முயற்சியாலும், கடும் உழைப்பாலும் இந்த அணி உருவாகியுள்ளது.இவர்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குஉள்ளது என்றார் பேடி.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணி கேப்டன் அஞ்சு ஜெயினிடம் குட்லக் பேனரைக்கொடுத்த டெல்லி போலீஸ் பயிற்சிக் கழக இயக்குநர் கிரன் பேடி கூறுகையில்,உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். என்ன கிடைக்கும் என்றுஎதிர்பார்க்காமல் சிறப்பாக விளையாடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.
இந்திய மகளிர் அணி, வியாழக்கிழமை நியூசிலாந்துசெல்கிறது. நவம்பர் 29-ம் தேதிபோட்டிகள் துவங்குகின்றன. இதுவரை ஆஸ்திரேலியா நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து 2 முறை கோப்பையை வென்றுள்ளன.
அணி விவரம்: அஞ்சு ஜெயின் (கேப்டன்), அஞ்சும் சோப்ரா (துணை கேப்டன்),பூர்னிமா ராவ், சந்திரகாந்தா, மித்தாலி ராஜ், ஹேமலதா கலா, கல்யாணி உம்ராங்கோர்,ரூபாஞ்சலி சாஸ்திரி, தீபா குல்கர்னி, நீத்து டேவிட், ரேனு மார்கரட், சுனிதா கனூஜியா,கவிதா ராய், சமீதா ஹரிகிருஷ்ணா, அருந்ததி, சுதா ஷா (பயிற்சியாளர்), சுக்வீந்தர்பாவா (உதவி பயிற்சியாளர்).
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications