ஜாதியை மாற்றியதாக திமுக எம்.எல்.ஏ. மீது புகார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தாராபுரம் எம்.எல்.ஏ., ஜாதியை மாற்றிச் சான்றிதழ் பெற்றுள்ளார், அவர்தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாராபுரம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் தி.மு.கவைச்சேர்ந்த எம்.எல்.ஏ சரஸ்வதி. இவர் வேட்டுவக் கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்என்றும், ஆனால், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் எனச் சான்றிதழ் பெற்றுள்ளார்எனவும் கோபி எம்.பி. காளியப்பன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த வி. டி மனோகர்ஆகியார் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சரஸ்வதி, ஜாதியை மாற்றிச் சான்றிதழ் பெற்றதாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்திலும்வழக்கு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போதுகூறப்பட்டுள்ள புகாரின் பேரில் விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டர்கருத்தையா பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி மாணிக்க வாசகம் விசாரணையைத்துவக்கியுள்ளார்.

வி.டி மனோகரன் அளித்துள்ள புகாரில், வேட்டுவக் கவுண்டர் என்பதற்கானஆதாரத்தை அளித்துள்ளார். எம்.எல்.ஏ. சரஸ்வதியின் சகோதரர் திருமணஅழைப்பிதழில் வேட்டுக் கவுண்டர் என்று ஜாதிப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதும்ஆதரமாகக் காண்பித்துள்ளார்.

மேலும், சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது அவரது பெயர் சரசு என்றபெயரே இருந்துள்ளது. அவரது பள்ளிச் சான்றிதழில் உள்ள பெயரை எவ்வித அரசுஅறிவிப்போ, முறையாக பெயர் மற்றமோ கொடுக்காமல் சரஸ்வதி என மாற்றிக்கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+