நெடுமாறனைப் புறக்கணித்த கிருஷ்ணா
பெங்களூர்:
ராஜ்குமாரை மீட்கச் சென்ற அரசுத் தூதர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக சட்டசபையில்வெளியிட்ட அறிக்கையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பெயர் இல்லை.
முதல்வர் கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ராஜ்குமாரை மீட்பதற்காக கோபால், கல்யாணிமற்றும் சுகுமாறன் ஆகியோர் காட்டுக்குச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கையைப் படித்த ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. சோமசேகர் கூறுகையில், முதல்வர் கிருஷ்ணாவின் சம்மதத்துடனேயே நெடுமாறன் காட்டுக்குச்சென்றார். இதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளது என்றார்.
இதை மறுத்துப் பேசிய கிருஷ்ணா, அரசுத் தூதர்கள் 3 பேர் தான். அவர்கள் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசும் சுப்ரீம்கோர்ட்டில் இதனைத் தெரிவித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications