For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர் மழையில் நனைகிறது தஞ்சை

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

மேட்டூர் அணை மற்றும் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகநல்ல மழை பெய்து வருகிறது.

தொடர் மழையையடுத்து மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதுநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அணையில் 112.12 அடி நீர் இருப்பு உள்ளது.அணைக்கு விநாடிக்கு 8768 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

கன மழை காரணமாக அதிராம்பட்டினம் கிராமம் மற்றும் பெரியகோட்டை ஆகியஇடங்களில் இரு இடங்களில் அணைக்கு வரும் கால்வாய்களில் பிளவு ஏற்பட்டுள்ளது.இதை சரி செய்யும் பணிகளில் பொதுப் பணித்துறை பொறியாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள வயல்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. கிணறுகளில் நீர்நிரம்பி வழிகிறது. அதிராம்பட்டினம் பகுதிகளில் பல வீடுகளின் சுவர்கள்விரிசலுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் முழுவதிலும் நல்ல மழைபெய்து வருகிறது. நாகப்பட்டனம், வேதாரண்யம் கடற் பகுதிகளில் அதிக அலைகள்இருப்பதாகவும், கடல் கொந்தளிப்பும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம்அறிவுறுத்தியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X