ராஜ்குமார் மீட்பு: வெள்ளை அறிக்கை கேட்கிறார் சங்கரய்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள்நிலவுவதால், அதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்என்று தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யாகூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:

ராஜ்குமார் மீட்பு தொடர்பாக பல செய்திகள் வெளியாகின்றன. இதனால் பொதுமக்கள்மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. எனவே உண்மை என்ன என்பதை விளக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களை ராஜ்குமாரைமீட்க அனுப்பியது தவறு. இது பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் தருவது போலஅமைந்து விடும். அவர்களது கை தமிழகத்தில் ஓங்க அரசு அனுமதித்தது போலாகிவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்புகள்வலுப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வரும் நேரத்தில், நெடுமாறன்போன்றவர்களை காட்டுக்கு அனுப்பியது தவறு.

வீரப்பன் மற்றும் அவருடன் புதிதாக சேர்ந்துள்ளவர்களை உடனடியாக பிடிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், வீரப்பனைப் பிடிக்கிறேன் என்றநடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு விட அரசு காரணமாகஅமைந்து விடக் கூடாது.

கர்நாடக சிறையில் பல ஆண்டுகளாக தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,விசாரணையின்றி வாடிக் கொண்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக,கர்நாடக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+