கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
மேட்டூர்:
வீரப்பனது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் அதிரடிப்படைப் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை 108 நாட்களுக்குப் பிறகு, பழ.நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவினர் மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர், வீரப்பனை பிடிக்கும் வகையில் காட்டுக்குள் புகுந்து தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கி விட்டனர்.
கடந்த முறை வனத் துறையினரை கடத்திச் சென்ற வீரப்பன் அவர்களை விடுதலை செய்து பின் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.
இதேபோல் தற்போது வீரப்பன் நடமாடும் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள போலீஸ் நிலையத்தை தாக்கலாம் என்று போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையொட்டி கொளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 தலைமை காவலர்கள், 6 போலீஸார் கொண்ட அதிரடிப்படையினர் 8 மணி நேரத்துக்கு ஒரு தடவை மாறி, மாறி தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜதுரை பாதுகாப்பு நடவடிக்கைகளை உடன் இருந்து கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications