தமிழ்த் தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு அலுவலகங்களில் மலிந்து கிடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தாவிடில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,நீதிமன்றம், ரயில்வே நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று திண்டிவனம் ரயில்வே ஸ்டேஷன்மாஸ்டருக்கு தமிழர் விடுதலைப் படையினர் மொட்டைக்கடிதம் மூலம் புதன்கிழமை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு வந்துள்ள, கடிதம் போஸ்ட்கார்டில் எழுதப்பட்டுள்ளது. அதில் திண்டிவனம் அருகே, அரசு ஊழியர்கள் அதிக அளவு லஞ்சம் வாங்குகிறார்கள்.
இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், ரயில்வே நிலையம் மற்றும் நீதிமன்றவளாகங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications