பருத்தி மீதான இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை:

இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீதான 5.5 சதவீத வரியை விலக்கிக் கொள்ள வேண்டும் என தென்னிந்தியமில்கள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

சைமா சங்கத் தலைவர் மாணிக்கம் ராமசாமி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வழக்கமாக பருத்தி அறுவடை காலங்களில் பருத்தியின் விலை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இந்தஆண்டு அறுவடை ஆரம்பத்திலேயே 15 சதவீதம் பருத்தி விலை உயர்வு இருந்து வருகிறது.

மேலும் டாலர் விலை உயர்வாலும், இந்தியப் பண மதிப்பு குறைந்துள்ளதாலும், இறக்குமதி மதிப்புஅதிகமாகியுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி 5.5 சதவீதத்தைஅரசு வாபஸ் பெற வேண்டும்.

சர்வதேச அளவிலும் பருத்தியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே மில்களின் நலன்கருதி அரசு இந்தமுடிவை மேற்கொள்ள வேண்டும்.

பருத்தி வாங்கவே ஒவ்வொரு மில்லும் மொத்த செலவில் சுமார் 60 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால்,மில்கள் பாதிப்படைந்து வருகின்றன. எனவே மில்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+