கேரள காட்டுப் பகுதியில் வீரப்பன்?

Subscribe to Oneindia Tamil

சத்யமங்கலம்:

அதிரடிப்படையினரை ஏமாற்றுவதற்காக வீரப்பன் கேரள காட்டு எல்லைக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்றுதகவல்கள் கிடைத்துள்ளன.

வீரப்பனைத் தேடிப் பிடித்துக் கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்களும்,ஆயுதப்படை போலீஸாரும் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.

அவர்கள் கடந்த 4 நாட்களாக சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்குள் புகுந்து வீரப்பனைத் தேடி வருகிறார்கள்

இதற்கிடையே வீரப்பன் கேரள காட்டுப் பகுதிக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. தனதுபிடியிலிருந்து, நடிகர் ராஜ்குமாரை விடுவித்த உடனேயே அதிரடிப்படையினர் எப்படியும் காட்டுக்கு வந்துதன்னைப் பிடித்து விடுவார்கள் என்பதை வீரப்பன் நன்கு உணர்ந்திருந்தார்.

வீரப்பன் காட்டு மலைப்பகுதியில் தினமும் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் ஆற்றல் படைத்தவர். இதைத்தூதுக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.

அந்தக் கணக்குப்படி பார்த்தால் கடந்த 5 நாட்களில் வீரப்பன் உத்தேசமாக 175 கிலோ மீட்டர் தூரத்தையாவதுகடந்து சென்றிருக்க முடியும்.

ராஜ்குமாரை விடுவித்த பின்னர் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நன்கு உணர்ந்த வீரப்பன்இன்னும் தமிழக காட்டு எல்லைப் பகுதியிலேயே இருப்பார் என்று நினைப்பது தவறு என்கின்றனர் அதிரடிப்படையினர்.

இதனால், முழு காட்டுப் பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+