ஓடும் ரயிலில் ஒரு "குவா குவா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு பிரசவமாகி ஆண் குழந்தை பிறந்தது.

சென்னைக்கு அருகே இருக்கும் தாம்பரம், சோலையூரில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரது மனைவி குப்பம்மாள் (25),நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு இரண்டு நாட்களில் பிரசவமாகி விடும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதனால் அவரை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது உறவினர்கள் ரயில் மூலம் அழைத்துச்சென்றனர். ரயில் நுங்கம்பாக்கம், எழும்பூருக்கு இடையே சென்று கொண்டிருந்த போது குப்பம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அவர் பெண்களுக்கான தனி பெட்டியில் சென்று கொண்டிருந்ததால் பெண்களும், குப்பம்மாளின் உறவினரும் சேர்ந்து பிரசவம்பார்த்தனர். குப்பம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

எழும்பூர் ரயில் நிலையம் வந்ததும் குப்பம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+