பாக்.கைப் பார்த்து பயப்படுகிறது அமெரிக்கா?
டெல்லி:
முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கை என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற காரணத்தால்தான், பாகிஸ்தானைபயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா தயங்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்ஸ்டீவன் எமர்சன் கூறியுள்ளார். இவர், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற தலைப்பில் 4 புத்தகங்களை எழுதியுள்ளார்.
டெல்லியில் நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் ஸ்டீவன் எமர்சன் பேசுகையில் கூறியதாவது:
பாகிஸ்தானை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் எளிதாக சேர்க்க முடியும். அதற்கான காரணங்களும் உள்ளன.ஆனால் முஸ்லீம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையாக இது கருதப்பட்டு விடும் என்பதால் பாகிஸ்தானைபயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா தயங்குகிறது.
தெருக்களில் ரத்த ஆறு ஓடும்போதுதான் அங்கு ஜனநாயகம் என்ற பேச்சே எழுகிறது. இதுபோன்ற வன்முறைக்கும்பல்களை ஆதரிப்பதை நிறுத்துவதன் மூலம் மட்டுமே, இவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.
பல தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில்தான் ஆகிய நாடுகளில்தான் பயிற்சி முகாம்கள்இருக்கின்றன என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications