For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கி பக்தன் வீரப்பன்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

வீரப்பன் துப்பாக்கிகளுக்கு சூடம் காட்டி வழிபடுவார் என அவருடன் தங்கி இருந்த தீவிரவாதி தெரிவித்துள்ளார்.

குள்ளஞ்சாவடி காவல் நிலையம் தாக்கப்ட்டது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கையில் பசுபதி என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு நானும், நடராஜன்,பீட்டர் பொன்னி வளவன் ஆகியோர்தூத்துக்குடி வந்து ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் குண்டு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டோம்.

அதன் பின்பு வீரப்பனுடன் கடந்த ஜுன் மாதம் தொடர்பு ஏற்பட்டது. மைசூர் தாளவாடி வழியாக அவர் இருந்த காட்டுக்குசென்றோம். அப்போது அவருடன 15 பேர் இருந்தனர். அவருடன் இருக்கும் போது தினமும் பல இடங்களுக்கு அழைத்துச்செல்வார். தினமும் காலையும் மாலையும் அவர் வைத்திருக்கும் எஸ்.எல்.ஆர்303 துப்பாக்கிக்கு சூடம் காட்டி வழிபடுவார்.

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவரை விட்டு விட்டு வந்துவிட்டேன் என அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X