50 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 2 பேர் பலி
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலத்தின் பக்கச் சுவரை உடைத்துக் கொண்டு அரசு பஸ் கவிழந்ததில், பஸ்சின் நடத்துனர்உட்பட இரண்டு பேர் உ.யிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து சேலத்துக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டுச் சென்றது. பஸ்சை டிரைவர் ரவிக்குமார்ஓட்டிவந்தார். சனிக்கிழமை அதிகாலையில் சேலத்திற்கு அருகே இருக்கும் ஆத்தூருக்கு அருகே வந்த போது டீ குடிப்பதற்காகபஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
அதன் பின் பஸ் கிளம்பி ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்த பின் வசிஷ்ட ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தை கடக்கும் போதுபேருந்து நிலை தடுமாறி பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் தலைகீழாக விழுந்தது.
ஓட்டுனர் இருக்கையின் பின்புறம் வழியாக இரும்பு கம்பி குத்தியதால் நடத்தனர் சண்முக சுந்தரம் (47) என்பவரும் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 26) என்பவரும் அந்த இடத்திலேயே இறந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த ஆண்கள் 31 பேரும், பெண்கள் 8 பேரும், 1 பெண்குழந்தை உட்பட்டவர்கள் பஸ்சிலிருந்து வெளியேவரமுடியாமல் அலறித் துடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பால்காரர்கள் போலீசுக்குதகவல் தெரிவிதத்தனர்.
ஆத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. , இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீயணைப்புப்படையினர் உதவியோடு பஸ்சின் பக்கவாட்டுதகடுகளை பெயர்த்து பேருந்துக்குள் சிக்கியிருந்த 38 பேரை ஆத்தூர் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications