கோவையில் பிடிபட்ட ரூ. 25 லட்சம் கள்ள நோட்டு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே கட்டுக் கட்டாக கள்ள நோட்டு பிடிபட்டது. ரூ. 25 லட்சம் மதிப்புள்ள இந்தக் கள்ள நோட்டுக்களைக் கடத்தி வந்தஇரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில் வரும் பஸ்களில் சோதனை செய்தனர்.அப்போது சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் இரண்டு பேர் ஒரு சூட்கேசுடன்பயணம் செய்தனர்.
போலீசார் இவர்களிடம் நடத்திய சோதனையில், சூட்கேசில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் கட்டுக் கட்டாகஇருந்தது. இதனைக் கேரளாவிற்குக் கடத்திச் செல்ல முயன்றதாக சதிஷ் (27), மற்றும் விஜூ ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications