அதிரடிப்படையினர் கூடாரத்தில் யானைகள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கியிருக்கும் அதிரடிப்படை வீரர்களின் கூடாரத்தை யானைகள் முற்றுகையிட்டன. இந்த யானைகளை காட்டுவாசிகளின்உதவியுடன் அதிரடிப் படையினர் விரட்டியடித்தனர்.
சத்திய வனப்பகுதியில், வடவள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள பங்களா மேட்டில் கூடாரம் அமைத்து அதிரடிப் படையினர் தங்கியுள்ளனர்.
அங்கு 5 யானைகள் திங்கள்கிழமை, அதிரடிப்படையினர் கூடாரத்தை நெருங்கின. இதை அறிந்த சோளர் இன காட்டு வாசி மக்கள், தகர டப்பாக்களைத்தட்டினர்.
அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அதிரடிப் படையினரும் சத்தம் போட்டு யானையை விரட்டினர். காட்டுக்குள் சென்றுள்ள அதிரடிப்படையினர், இதுபோன்ற புது அனுபவங்களை பெற உள்ளனர்.












Click it and Unblock the Notifications