"காய்ச்ச மாட்டோம் .. குடிக்க மாட்டோம்
சென்னை:
கள்ளச் சாராயம் காய்ச்ச மாட்டோம், குடிக்க மாட்டோம் என்று சுமார் 240 கள்ளச் சாராய வியாபாரிகள் போலீஸ்முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து மதுவிலக்கு போலீஸார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சென்னை கிழக்கு மாவட்டம் பூந்தமல்லிஉட்கோட்டத்திலுள்ள கொளப்பாக்கம், பாரிவாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் கள்ளச்சாராயத்தைகுலத் தொழிலாக பலர் செய்து வந்தனர்.
இப்பகுதிகளில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மதுவிலக்கு ஐ.ஜி நடராஜ், செங்கை சரக டி.ஐ.ஜி ஜாபர் சேட்,எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி.நாகராஜன் மற்றும்போலீஸார் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நடவடிக்கையால் இப் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள் தங்களது தொழிலை கை விட்டனர். இதைத்தொடர்ந்து இந்த கிராமங்களில் மதுவிலக்கு கமிட்டி ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. விழா மதுவிலக்குபிரிவு கூடுதல் எஸ்.பி. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கூடுதல் எஸ்.பி நாகராஜன், டி.எஸ்.பிக்கள் மூக்கையா, பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார்,எஸ்.ஐ.க்கள் பொற்செழியன், வைகுண்ட மூர்த்தி உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். அனைவர்முன்னிலையிலும், கள்ளச்சாராய வியாபாரிகள் 240 பேர் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டோம், விற்க மாட்டோம்என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications