பேரணி நடத்துகிறார்கள் தியேட்டர்கள் உரிமையாளர்கள்
கோவை:
கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு திரையரங்குஉரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கோவையில் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமநாதன் தலைமையில் பொதுக் குழுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் பேரணி நடத்தவுள்ளோம். பேரணிநடத்தப்படும் நாள் குறித்து அடுத்த 15 தினங்களில் பொதுக் குழுக் கூடி விவாதிக்கும்.
ஆங்கிலப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ள தடையை உடனடியாக அகற்ற வேண்டும். இதற்குதடை விதிக்கக் கூடாது. கூட்டு அதிகாரிகள் குழு என்ற பெயரில் திரையரங்குகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டகுழுவை ரத்து செய்ய வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யும் பராமரிப்புக் கட்டணத்தை 50 பைசாவிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தவேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.
கிராமப்புறத் திரையரங்குகளில் குறைந்த பட்சக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்க வேண்டும். இந்தக் கட்டண நிர்ணயம்செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேபிள் டி.வியால் திரையரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும். கேபிள் டி.விஆபரேட்டர்கள் நிமக்கு விரோதியல்ல. அவர்களை நமது சகோதரர்களாகப் பாவித்து புதுப்படங்களை ஒளிபரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கலாம் என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications