வீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவி: கிருஷ்ணா தகவல்
டெல்லி:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிக்க மத்திய அரசின் உதவியைக் கோருவதற்காக கர்நாடக முதல்வர் டெல்லி சென்றிருந்தார். இது குறித்து உள்துறைஅமைச்சர் அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்தாவது:
வீரப்பனை பிடிப்பதில் தமிழக, கர்நாடக அரசுகள் உறுதியுடன் செயல்படும். வீரப்பனை பிடிக்க மத்திய அரசின் உதவியை கேட்டிருக்கிறேன்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். அவரும் வீரப்பனை பிடிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இரு மாநிலத்தைச் சேர்ந்த அதிரடிப் படை வீரர்கள் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர். இது போல் இக்கட்டான சமயங்களைசமாளிக்க தேசிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
கடத்தல் தொடர்பான விவகாரங்களில் கர்நாடக அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும்விவரங்கள் எதுவும் கூற இயலாது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications