இலங்கை: கண்ணி வெடியில் பஸ் சிக்கி 7 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் அனுராதபுரா பகுதியில், சென்று கொண்டிருந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கியதில் 7 பேர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பள்ளிக் குழந்தைகள்.
அனுராதபுரா அருகே தன்வேலா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு பஸ் கண்ணி வெடியில்சிக்கியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் அனுராதபுரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர். அனுராதபுரா தலைநகர் கொழும்பிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இனப்பிரச்சனைக்குத்தீர்வு காண எந்த வித நிபந்தனையுமின்றி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்த சிலமணி நேரங்களில் இந்தக் கண்ணி வெடித் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
நிபந்தனையற்ற பேச்சு நடத்த பிரபாகரன் தயார்