கார் விபத்தில் அறிவானந்த பாண்டியன் மரணம்
திருச்சி:
அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் அறிவானந்த பாண்டியன் கார் விபத்தில் புதன் கிழமை மரணம் அடைந்தார்.
அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் அறிவானந்த பாண்டியன். வயது 40. நாடார்கள் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் சண்முகக்கனி உள்பட 4 பேர் செவ்வாய் கிழமை இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
கார் புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள வால்பட்டரை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது கார் எதிர்பாராத விதமாக அங்கு பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த அறிவானந்த பாண்டியன் மரணம் அடைந்தார். கார் டிரைவர் தர்மன் என்பவரும் அதே இடத்தில் பலியானார்.
இளைஞர் அணித்தலைவர் சண்முககனி, அறிவானந்த பாண்டியனுக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸ்காரர் முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்முகக்கனி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அறிவானந்த பாண்டியனது உடல், கார்மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
புதன்கிழமை மாலை மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் அறநிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர்கீரைத்துறை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications