கால்பந்தாட்ட லீக் போட்டிகளை புறக்கணிக்க வீரர்கள் முடிவு
பெங்களூர்:
தேசிய பந்தாட்ட லீக் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என முன்னணி கால்பந்தாட்ட அணிகளின்கிளப்பகள் அறிவித்துள்ளன.
அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் மீது முன்னணி கால்பந்தாட்ட கிளப்புகள் மற்றும் ஸ்பான்சர்நிறுவனங்கள் அதிருப்தி கொண்டிருந்தன.
இதன் காரணமாக இந்த அமைப்புகள் இந்தியன் பிரிமியர் கால்பந்தாட்ட சங்கம் என்ற பெயரில் புது அமைப்பைதுவக்கியுள்ளனர். இதற்கு விஜய் மல்லையா தலைவராக உள்ளார்.
இந்த சங்கத்திற்கு 9 முன்னணி கிளப்புகளின் ஆதரவு உள்ளது. தங்கள் கோரிக்கையை இந்திய கால்பந்தாட்டகூட்டமைப்பு ஏற்காவிட்டால் கால்பந்தாட்ட லீக் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என இந்த புதிய சங்கம்அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் 10-ம் தேதி தேசிய கால்பந்தாட்ட லீக் போட்டிகள் துவங்கவுள்ளன. இதில் 12 அணிகள்விளையாடும். ஆனால் 9 அணிகள் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளதால் லீக் போட்டிகள் நடப்பதுகேள்விக் குறியாக உள்ளது.
அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பிற்கு இணையான புது சங்கம் ஆரம்பித்துள்ள இந்த அணிகள்தாங்களாகவே கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த முடிவு எடுத்துள்ளன.
இந்த கிளப்புகளின் எந்த வீரரும் இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு நடத்தும் ாட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.












Click it and Unblock the Notifications