அந்நியச் செலாவணி மோசடியில் 7 தனியார் தொலைக் காட்சி நிறுவனங்கள்
டெல்லி:
அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஸீ தொலைக் காட்சி நிறுவனம் உள்பட 7 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஷோ காஸ்நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது:
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தற்போது ஸூ தொலைக்காட்சி நிறுவனம்உள்பட 7 தொலைக்காட்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
மொத்தம் ரூபாய் 33 கோடி மோசடி நடந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வு நிறுவனம் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாததால் இது குறித்தான இதர விவரங்களைஇப்போதே கூற முடியாது.
மோசடி வழக்கு குறித்து வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முழு விசாரணையையும் நடத்தி முடிக்கும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications