மதுரை துணை மேயரைப் போலீஸ் தேடுகிறது
மதுரை:
மதுரையில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான துணை மேயர் மிசா பாண்டியனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த் புரம் அருகே நிதி நிறுவனம் ஒன்றை ஜெகதீசன் என்பவர் நடத்தி வந்தார். இவருக்கும், மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுக்கும் இடையேமுன்விரோதம் இருந்து வந்ததாம்.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 18 ம் தேதி ஜெகதீஷ் அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது குறித்துப் போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் செல்வம் என்ற ரவுடி இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டது தொடர்பாக திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி துணை மேயர் மிசா பாண்டியன் என்று கூறினார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் மிசா பாண்டியனைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அதற்கு முன்பே துணைமேயர் மிசா பாண்டியன் தலைமறைவாகி விட்டார்.
யு.என்.ஐ.