ஹைதராபாத்தில் அதிமுக எம்.பி.க்கள் கூட்டம்
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை ஹைதராபாத்தில் சனிக்கிழமைகூட்டியுள்ளார்.
ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் சனிக்கிழமை அ.தி.மு.க.எம்.பி.க்கள் கூட்டத்தை திடீரென கூட்டியுள்ளார். அவர் எம்.பி.க்கள் அனைவரையும் ஹைதராபாத்திற்கு வரும்படிஅழைப்பு விடுத்துள்ளார்.
டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் திட்டங்கள் குறித்து தி.மு.க. விவாதிக்க இருக்கும் நிலையில் அ.தி.மு.க.எம்.பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா அவசரக்கூட்டம் என்று மட்டுமே கூறியிருக்கிறார். கூட்டம் கூட்டப்படுவதற்கான காரணம் எதையும்அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த கூட்டத்தில் தேர்தல் நிதி வசூல் பற்றியும், அதில் எம்.பி.க்கள் பங்குபற்றியும் முக்கிய விவாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற விவாதங்களில் அ.தி.மு.க.வின் அணுகுமுறை பற்றியும், தேர்தல் நேரத்தில் கட்சிகளின்போக்குகளில் மாற்றம் வரக்கூடும் என்பதால் அந் நேரத்தில் எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்பது குறித்தும்எம்.பி.களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த கூட்டம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளஜெயலலிதாவின் திராட்சை தோட்ட வீட்டில் நடக்கிறது.