விருதுக்காக டஜன் கணக்கில் குழந்தை பெறும் தாய்
டெல்லி:
30 வருடங்களில் 22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் இந்திய அரசு எனதுசாதனையைப் பாராட்டி விருது வழங்கும் வரை குழந்தைகள் பெற்றெடுத்துக் கொண்டே இருப்பேன் எனகூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் பிகாரிபுர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சோன்ஹாலி என்பவர். இவர் 30 வருடங்களில்22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்திய அரசு என்னை பாராட்டி விருது வழங்கும் வரை ஓய மாட்டேன். தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார்.
சோன்ஹாலிக்கு 15 வயதாகும் போது திருமணம் நடந்தது. அப்போது அவரிடம் அதிகமான குழந்தைகள்பெறுபவர்களுக்கு இந்திய அரசு விருது வழங்கும் என ஒருவர் கூறினார்.
அன்று முதல் சோன்ஹாலி தொடர்ந்து குழந்தைகளை ஈன்று வருகிறார். இவர் பெற்றெடுத்த குழந்தைகளில் 8குழந்தைகள் இறந்து விட்டன. இவர் தற்போது 23-வது முறையாக கரப்பமுற்றிருக்கிறார்.
இந்திய அரசு கவுரவிக்கா விட்டாலும் அவரது கிராமத்தில் அவரது பெருமை உறுதியாகி விட்டது. 500 பேர் வாழும்அந்த கிராமத்தில் எந்த குடும்பத்திலும் 12 நபர்களுக்கு மேல் கிடையாது.
மின் இணைப்பு, தொலைக்காட்சி பெட்டி, சரியான பாதைகள் எதுவும் இல்லாததால் செக்ஸ் மட்டும்தான்எங்களுக்கான ஒரே பொழுதுபோக்கு என அந்த கிராமத்து மக்கள் கூறுகிறார்கள். மக்கள் தொகையை அபிவிருத்திசெய்வதே எங்கள் பொழுது போக்கு என அந்த கிராமத்தைத் சேர்ந்த டாலேராம் என்பவர் தெரிவிக்கிறார்.
மாவட்ட அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கான்டோம்களை விநியோகித்தாலும் அதை யாரும்சட்டை செய்வதாக தெரியவில்லை. அவர்கள் இந்திய அரசு மக்கள் தொகையை குறைக்க பாடுபடுவதைப் பற்றியும்அறிந்து கொண்டதாக தெரியவில்லை.
சோன்ஹாலியின் முதல் குழந்தையின் வயது 26. சிறிய குழந்தை பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது.அனைவரும் ஏழ்மையில் வாழந்து வருகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.சோன்ஹாலி உயிரோடுவாழும் 25 குழந்தைகள் வேண்டும் என்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.