புயல் சேதம்: கடலூர் விரைகிறார் மத்திய அமைச்சர்
கடலூர்:
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சப் பொன்னுசாமி பார்வையிட இருக்கிறார்.
சமீபத்தில் தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான புயல் கடலூர் அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்தது.புயலால் கடலூர் பகுதியில் பெரும் சேதமும் ஏற்பட்டது.
புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்வையிடுவதற்காக மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் பொன்னுசாமி கடலூர் வருகிறார்.
பொன்னுசாமி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார். குறிப்பாக அவர் சிதம்பரம் நகரத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடத்ததைபார்வையிடுகிறார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசிலிருந்து அதிக பட்ச உதவிகளை பெற்று தருவதாக அவர் உறுதி அளித்திருகிறார்.
புயல் கடந்த பின்னும் சிதம்பரம் நகரத்தில் மின்சார விநியோகம் சரி செய்யப்படவில்லை. அங்கு குடிநீர் சரிவர கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் போலீசார் உதவியுடன் சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய முயன்று வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications