அல்கோர் கோரிக்கை: நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
வாஷிங்க்கடன்:
பாம்பீச், மியாமிடே வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் அல்கோர் விடுத்த கோரிக்கையை புளோரிடா சுப்ரீம்கோர்ட் நிராகரித்து விட்டது.
புஷ் வெற்றி:
புளோரிடா மாநிலத்தில் முதலில் குடியரசு கட்சி வேட்பாளர் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையிலும் புஷ்வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அல்கோர் வழக்கு:
ஆனால் புஷ்ஷின் வெற்றியை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர், பாம்பீச், மியாமிடே வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் என்றும், அவற்றைக் கையால் எண்ண வேண்டும் என்றும் புளோரிடா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அத்துடன் பாம்பீச் பகுதியில் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் அங்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்றார். இந்த 2 வழக்குகளையும் புளோரிடா சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
கிளின்டன் கருத்து:
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் தேர்தல் குளறுபடி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புளோரிடா மாநிலத்தில் பதிவான வாக்குகள்அனைத்தும் தவறு ஏதும் இல்லாமல் முறைப்படி எண்ணப்பட்டால் ஜனநாய கட்சி வேட்பாளரான துணை அதிபர் அல்கோர் வெற்றி பெறுவார் என்றுஅவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications