வேலூர் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூர்:
வேலூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் உட்பட 5 அரசு அலுவலகங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து அங்கு காவல் பலப் படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தைச் சுற்றி நீதிமன்றங்கள், மாவட்ட தலைமை தபால் அலுவலகம்,மத்திய கூட்டுவு வங்கி, மத்திய பேருந்து நிலையம் போன்றவை உள்ளன.
இந்த 5 அலுவலகங்களையும் டிசம்பர் 6-ம் தேதி குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மாவட்ட ஆட்சி தலைவருக்குமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாள். இதனால் வன்முறைச் சம்பவங்கள் நிகழக் கூடும் எனஎதிர்பார்க்கப் படும் சூழ்நிலையில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கடிதம் தற்போது காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் காவல் பலப் படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications