புலிகளுக்கு கப்பலில் செல்கிறது ஆயுதங்கள்
கொழும்பு:
வெளி நாட்டிலிருந்து நவீன ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று இலங்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
இதையடுத்து இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேபோர் நடந்து வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு சமரசப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர சமரச பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.
புலனாய்வுத் துறை தகவல்:
இதற்கிடையே நவீன ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு, கப்பல் ஒன்று இலங்கை நோக்கி வருவதாகப் புலனாய்வுத்துறைக்குத் தெரிய வந்துள்ளது. இந்தக்கப்பலில் விமானங்களைத் தகர்க்கும் நவீன ஏவுகணைகளும் உள்ளன.
இதையொட்டி, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷியாவில் வசிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் நிமல் சிவலிங்கம் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வங்குவதற்காக இவர் ரஷியாவில் உள்ள தமிழர்களிடம் ரூ 50 லட்சம் பணம் வசூலித்தாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications