தமிழக சுற்றுப்புறச் சூழல் படிப்பிற்கு கனடா அரசு 1.42 கோடி நிதி
கோவை:
சுற்றுச் சூழலில் டிப்ளமோ படிப்பிற்கு ரூ. 1. 42 கோடி ரூபாயை கனடா அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என நாச்சிமுத்து பாலிடெக்னிக் துணைத் தலைவர்மாணிக்கம் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கனடா அரசின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் உள்ள பல்வேறு பாலி டெக்னிக்குகளுக்கு கல்வி மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது.
இத்தகைய கூட்டுத் திட்டம் ஏற்கனவே 20 பாலி டெக்னிக்குகளில் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் உள்ளநாச்சிமுத்து பாலிடெக்னிக், இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல் படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த நிறுவனம், நாச்சிமுத்து பாலி டெக்னிக்கிற்கு மேலும் 4.65 லட்சம் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியைக் கொண்டுசுற்றுச் சூழலில் டிப்ளமோ பட்டப்படிப்பு ஒன்றை நாச்சிமுத்து பாலிடெக்னிக் துவங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றார்.