கச்சத்தீவில் மீன் பிடிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம்
சென்னை:
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய வெளியுறவுத் அமைச்சகத்துக்கு தமிழக அரசு இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது. தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ம்தேதி மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
டெல்ப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை தர வேண்டும் எனவும் முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்து வரையில்சர்வதேச கடல் எல்லையைக் கடந்து வந்து மீன் பிடித்த 38 இலங்கை மீனவர்களை பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீண்டும் இலங்க்ைகு திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications