விரைவில் சென்னையில் தொழிலாளர்களுக்கான நல வாரியம்
கோவை:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் வரும் டிச. 16ம் தேதி சென்னையில் துவங்கப்படவுள்ளது.
கோவையில் அமைப்பு சாரா தொழில் நல வாரிய இணை ஆணையாளர் ராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 90 சதவீத தொழிலாளர்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இவர்களில் 75 சதவீதத்தினர் விவசாயக் கூலியாகஇருந்து வருகின்றனர்.
மீதமுள்ள தொழிலாளர்கள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களாகவும், மரம் ஏறும் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
கட்டுமானத் தொழில்களுக்கு தனி வாரியம் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு தொகுப்பு நிதியாக ரூ. 27 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை கிடைக்கும்.
பணிக் காலத்தில் இறந்தால், தொழிலாளர்களுக்குத் தலா ஒரு லட்சம் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கும். இந்த வாரியத்திற்கானத் துவக்க விழாசென்னையில் வரும் 16ம் தேதி துவங்கவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications