பொருத்தமற்ற விருதுகள்: சு.சமுத்திரம் வேதனை
கோவை:
காவிய வீரர்களின் பெயர்களில் பொருத்தமற்ற விருதுகளை வழங்குவது வியப்பிற் குரியதாகவும்,முரண்பாடுகள்நிறைந்ததாகவும் உள்ளது என எழுத்தாளர் சு.சமுத்திரம் பேசினார்.
கோவையில் விஜயா பதிப்பகம் ஒரு மாத காலமாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவில் பெரும் எழுத்தாளர்கள்கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த விழாவில் எழுத்தாளர் சு.சமுத்திரம் பேசியதாவது:
மத்திய அரசனாலும் சரி, மாநில அரசானாலும் சரி, ஒருவர் தனது துறையில் முன்னற்றம் கண்டு சாதனை செய்தால்,அவர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்துவது வரவேற்கக் கூடியதே. ஆனால் இத்தகைய விருதுகளுக்குபொருத்தமற்ற பெயர்களை வைப்பது தான் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.
வேடனுக்கும், இளவரசர்களுக்கும் அம்பு விடுவதில் பயிற்சி அளித்தவர் துரோணாச்சாரியார். ஏகலைவனின்திறமையைக் கண்டு, துரோணாச்சரியார் அவனிடம் தனது பெரு விரலை குரு தட்சணையாகக் கேட்டுப் பெற்றார்.இத்தகைய குருவின் பெயரால், விளையாட்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பெயரால் விருதுகள்வழங்கப்படுகிறது.
இதே போன்று தனக்கு நிகரான திறமை கொண்ட இன்னொருவன் இருக்கக் கூடாது என நினைத்தவர் அர்ச்சுனன்.போர் புரியும் சகல வித்தைகளையும் அறிந்தவன் தான் அர்ச்சுனன். ஆனால், ஒரே திறமையை மட்டும்கொண்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அர்ச்சுனன் பெயரில் விருது என்பது கேலிக் கூத்தாக உள்ளது.
தாழ்த்தப்பட்ட பெண்கள் மாரப்பு போடக் கூடாது என 35 ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை மாற்றிஅமைத்தவர்கள் வைகுண்டசாமி. வள்ளலார் இவர்கள் பற்றி வரலாற்றில் இடம் பெறவில்லை. இவர்களைப் பற்றிதமிழ் இலக்கியங்களில் இடம் கிடையாது. ஆனால் சங்கராச்சாரியார் பற்றி மட்டும் அனைவருக்கும் தெரியும்.
சமூகம் எதை தருகிறதோ, அதை மேம்படுத்தி வாசகர்களுக்குத் தருவது தான் இலக்கியம். வாசகர்கள் புரிந்துகொள்ளும் படி எழுதுவது தான் இலக்கியம். இதில் தான் இலக்கியத்தின் இலக்கு உள்ளது என்றார்.
விழாவில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, விஜயாப் பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் ஆகியோர்கலந்து கொண்டனர்.