சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை செய்த சி.பி.ஐ. கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங் குறித்து விசாரித்த சி.பி.ஐ. அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், நயான் மோங்கியா மற்றும் அஜய் ஷர்மா ஆகியோர்மீது குற்றம் சுமத்தியது. மேலும் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
தற்போது சி.பி.ஐ.யின் குற்றச் சாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. கூறியதாவது:
கிரிக்கெட் வாரியம் சி.பி.ஐ.யின் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் வரிக்கு வரி மறுப்புதெரிவித்திருககிறார்கள். இது மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகும்.
மனோஜ் பிரபாகர் சி.பி.ஐ. தன்னிடம் நடத்திய விசாரணையை வீடியோ எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அவர் நேர்மையானவராக இருந்தால் அதை மக்களுக்குகாண்பிக்க வேண்டும். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களான ஆதாரங்களை தேவையான சமயத்தில் சி.பி.ஐ. வெளியிடும் என கூறினார்.












Click it and Unblock the Notifications