ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு
குழந்தாய் எதற்கு வந்தாய்?
ஞானம் பெற!
உன்னை அனுப்பியது யார்?
வியாச முனிவர்.
வரும்பொழுது கடைத் தெருவில் என்ன என்ன பார்த்தாய்?
சர்க்கரைப் பண்டங்கள்.
வேறு ஏதும் பார்த்தாயா?
பேசிக் கொண்டே சுற்றி வரும் சர்க்கரைப் பொம்மைகள்?
இன்னும் என்ன பார்த்தாய்?
இங்கே ஏறி வரும் உறுதியான சர்க்கரை மெத்தைப் படிகள்
இங்கே என்ன நடக்கிறது?
ஒரு சர்க்கரை பொம்மை இன்னொரு சர்க்கரை பொம்மையுடன் உரையாடுகிறது!
நீ போகலாம். உனக்கு எல்லா ஞானமும் வந்து விட்டது ... என்றார் ஜனகர்.
பாம்பின் கால் பாம்பறியும். ஞானியை ஞானியே அறிவான். நண்பர்களே ... ஞானத்தைத் தேடுபவர்கள், ஞானியைத் தேடுவதே முதல் வேலை.
இவன், அவன், அது என்று பேதம்படுத்தி வாழ்வைக் குழப்பும் அறியாமையின்றி எல்லாம் சர்க்கரை பொம்மையாகத் தெரிகிற அபேத ஞானம்பெற்றவர் சுகர்.
எல்லாமே பரப் பிரும்மம் என்கிற கடவுளாகவே அவர் உணருகிறார். கடவுள் கடவுளோடு பேசுகிறார். கடவுள் கடவுளோடு சண்டையிடுகிறார்.கடவுள் கடவுள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆக எல்லாமே கடவுள் என்னும் நிறை ஞானம் மிக்கவர் சுகர். அப்படிப்பட்டவருக்கு குருதேவையா? தேவை என்கிறார் வியாசர்.
சரியாக 1 கிலோ எடையுள்ள எடைக்கல் உங்களிடம் இருந்தாலும் அதில் அரசாங்க முத்திரை அவசியம் வேண்டும். அது போல ஞானம் உங்களிடம்இருப்பினும் ஒரு ஞானியின் அங்கீகாரம், முத்திரை அவசியம். எனவே ஒரு குருவைத் தேடுவது சாதகனின் முதல் கடமை.
இன்பத்துக்கு இன்பப்படாத துன்பத்துக்குத் துன்பப்படாத சமநிலையை வற்புறுத்துகிறது கீதை. அப்படி சமமாக இருக்க சுலபத்தில் முடியாது. எனவே அப்படிஇருக்கிற ஞானிகளைப் பார்த்து, பழகி, அவர்கள் எப்படி அப்படி இருக்கிறார்கள் என்று உணர்வதே நம் கடமை.
இராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படி வாழ்ந்த ஒரு ஞானி. அவரால் எப்படி அப்படி இருக்க முடிந்தது? அவரே சொல்கிறார்.
பலாப் பழத்தை அறுக்கிறவர்கள் அதன் பசையில் இருந்து தப்புவதற்கு ஓர் உபாயம் செய்வது உண்டு. கையில் எண்ணெயைத் தடவிக் கொண்டு பலாப்பழத்தைப்பிய்த்தால் பலாப் பிசின் கையில் ஒட்டாது. அப்படி சுளை எடுப்பது போல ஈஸ்வர சிந்தனையை(பக்தி) மனத்தில் வைத்துக் கொண்டு உலக விவகாரத்தில்ஈடுபட்டாலும் சிக்கல் வராது!












Click it and Unblock the Notifications