காஷ்மீர் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அமைதி சுற்றுலா
Subscribe to Oneindia Tamil
ஷெரீஃபாதாபாத்:
தீவிரவாதத்தினால் கஷ்டப்பட்டு வரும் காஷ்மீரில் இருக்கும் குழந்தைகளுக்கு நம்பிக்கை எற்படுத்த புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கு வாழும் குழந்தைகளின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த ராணுவம் ஆபரேஷன் சத்பவான் என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் 60 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய சுற்றுலாவுக்கு கிளம்பி சென்றுள்ளனர்.
ராணுவ மேஜர் சுக்தேவ் தலைமையில் இவர்கள் அமைதிப் பயணமாக டில்லி, ஆக்ரா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்அமைதி பயணமாக சுற்றுலா செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications