டிச.6 ல் வன்முறைச் சம்பவம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான வரும் டிசம்பர் ஆறாம் தேதி அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் கண்காணிப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எழும்பூர் மற்றம் சென்ரல் ரயில் நிலையங்களில் போலீஸார் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை பரிசோதிக்கதுவங்கியுள்ளனர்.
மேலும் மோப்ப நாய்கள் ரயில் நிலைய ப்ளாட்பாரங்களில் சுற்றி வருகின்றன. இதன் மூலம் தீவிரவாத செயல் தடுப்பு நடவடிக்கைமுடுக்கிவிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 500பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரையில் நிலையத்திற்குள் செல்லவும் வெளியே வரவும் பல்வேறு வழிகள் உள்ளன.
இவை அனைத்தும் தற்பொழுது மூடப்பட்டுள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு வழி மட்டுமேதற்காலிகமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் ஏற்கனவே போலீஸார் தீவிரமாக கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பஸ் நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்லூரிகள்,பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications