திருப்பூரில் வக்கீல்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருப்பூரில் கூடுதலாக உதவி நீதிமன்றம் அமைக்கக் கோரி வக்கீல்கள் நடத்தி வந்த 20 நாள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபசானது.

திருப்பூரில் ஏற்கனவே உள்ள சப் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. வாகன விபத்து,ஜீவனாம்ச வழக்குகள் உட்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இந்நிலையில் வழக்குகளைத் துரிதப்படுத்த கூடுதலாக ஒரு உதவி நீதிம ன்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவக்கீல்கள் மற்றும் பொது அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் கோரிக்கை நிறைவேறாததால், உயர்நீதிமன்றம் அளித்தும் நிதிப் பற்றாக்குறை தீரவில்லை. இதைக்கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் கடந்த மாதம், 15ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணா விரதத்தை துவக்கினர்.இதனால் அனைத்து நீதிமன்றப் பணிகளும் நின்று போயின.

இந்நிலையில், திருப்பூர் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உள்பட சென்னை சென்று முதல்வருடன்பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் முதல்வர் சப் கோர்ட் அமைக்க உறுதியளித்தார். இதையடுத்து 20 நாட்களாக நடந்துவந்த போராட்டம் வாபஸ் ஆனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+