இந்தியாவின் நேரடித் தலையீட்டை விரும்பவில்லை இலங்கை
டெல்லி:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில், இந்தியாவின் நேரடித் தலையீட்டை இலங்கை விரும்பவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நம் வீட்டு விஷயங்களில் பக்கத்து வீட்டினரின் தலையீட்டை நாம் விரும்புவோம். ஆனால் நம் வீட்டுப்பிரச்சனைகளில் பக்கத்து வீட்டினரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம். இதுபோல்தான் இலங்கைப் பிரச்சனையும்.
நார்வே போன்ற நாடுகள் இலங்கையுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நேரடியாக முயற்சி மேற் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தியா தனது நிலையில்ஸ்திரமாக உள்ளது. அதாவது இலங்கைப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண இந்தியா விரும்பினாலும் இந்தியா நேரடியாகத் தலையிடவில்லை.
மேலும் இந்த முறை புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முறைஇப்பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
அதேபோல் அண்மையில் இந்தியக் குழு ஒன்று இலங்கைக்குச் சென்றது. அந்தக் குழு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுதலைப்புலிகள் தலைவர்பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் கொஞ்சமும் உண்மையில்லை என்றும்நிபுணர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.