இஸ்ரேல் - பாலஸ்தீனியர்களிடையே தொடர் சண்டை
ஜெருசலேம்:
ஜெருசலேத்தில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதுகுறித்து, பாலஸ்தீனியர்கள் கூறுகையில், பெத் ஜெல்லாக் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் இரண்டு பேர்காயமடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இதுகுறித்துக் கூறுகையில், மேற்குக் கரை பகுதியில் பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இதில் இஸ்ரேலைச் சேர்ந்தஒருவர் காயமடைந்தார்.
ஆனால் இதை மறுத்த பாலஸ்தீனியர்கள் கூறுகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் நடத்திய தொடர் தாக்குதலில் 25 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சுமத்திக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து 2 மணி நேரத்திற்குத் தொடர் சண்டை நீடித்தது.
1994 ம் வருடம் யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் ஏற்பட்ட போரில் 29 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றுபாலஸ்தீனியர் ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.