கரூர் நீலக்கல்லுக்கு பெங்களூர் வியாபாரிகளிடம் மவுசு
கரூர்:
கரூர் அருகே நீலக்கற்களை விலை கொடுத்து வாங்க மும்பை, பெங்களூர் வியாபாரிகள் முகாமிட்டு வருகின்றனர்.அடுத்தவர் நிலத்தில் நீலக்கல்லைத் தோண்டி எடுத்து விற்பனை செய்ய முயன்ற வியாபாரியைப் போலீசார் கைதுசெய்தனர்.
கரூர் மாவட்டத்தில் கோட்டப்புலிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமசாமிக் கவுண்டர்என்பவரது மகன் பெருமாள் (42). இவரது தாயாருக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு கும்பல் நள்ளிரவில் வேனில்வந்திறங்கியது. நாகராஜ் என்ற வியாபாரி சுமார் 30 ஆட்களுடன் வந்து நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தனர்.
இது குறித்து பெருமாளிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. எனவே, இது குறித்த தகவல் அறிந்த பெருமாள்,போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அறிந்த கும்பல் தப்பி ஓடியது. வியாபாரி நாகராஜ் மட்டும்போலீசாரிடம் மாட்டிக் கொண்டார். அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கோட்டப்புலிப்பட்டி , காணியாளம்பட்டி உள்பட பல இடங்களில் பல மடங்கு விலை மதிப்புமிக்க நீலக்கற்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்தக் கற்களை விலை கொடுத்து வாங்க மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து ஆட்கள் வருகைதந்தனர். இவர்கள் கரூரில் முகாமிட்டு இதனை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் இந்தப் பகுதியில், கற்களை பாதுகாக்கவும், உரிய அனுமதியின்றி தோண்டுபவர்களையும் கனிமவளத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications