மாஜி பிரதமர்கள் தலைமையில் தர்ணா
சன்னை:
முன்னாள் பிரதமர்கள் தமைையில் இந்த மாதம் 14-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் இருந்து 1,000தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஜி.ஏ. வடிவேலு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது பற்றி அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமை, சர்க்கரை, பருத்தி ரப்பர், தேயிலை போன்ற விவசாயவிளை பொருள்களையே வெளி நாட்டினருக்கு வரிச்சலுகை அளித்து வருகிறது.
இதன் காரணமாக நம் நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கோடிக்ணக்கான மக்கள்வேலையின்றி கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதை கண்டித்து இந்த மாதம் 14-ம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி நாடாளமன்றம் முன்பு பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடக்க விருக்கிறது.
இதில், முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், தேவே கவுடா, சந்திரசேகர், குஜ்ரால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்கள். பல தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து 1,000 தொண்டர்கள் பேரணியில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.