மீண்டும் திமுக, தமாகா கூட்டணிக்கு முயற்சி
விருதுநகர்:
மீண்டும் தி.மு.க, த.மா.கா கூட்டணி அமைய தீவிர முயற்சி எடுக்கிறேன் என்று சிவகாசி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சொக்கர்கூறினார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சொக்கர், த.மா.கா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருவராகவும் இருப்பவர்.விருதுநகரில் புதன்கிழமை நிருபர்களை சந்தித்தார்.
96- ஆம் ஆண்டு நல்லாட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க, த.மா.கா கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டும். நீங்கள் தி.மு.க சார்பில் சட்டசபைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறார்கள்.
எனக்கு தி.மு.கவில் சீட் தந்தால் போட்டியிடலமா இருக்கப் போகிறேன். தி.மு.க , த.மா.கா கூட்டணி ஏற்படுவதற்கு தீவிர முயற்சிமேற்கொண்டு இருக்கிறேன்.
அப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால் போதும் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை.
மீண்டும் தமிழகத்தில் ஒரு நல்லாட்சி ஏற்பட கலைஞரும், மூப்பனாரும் இணைந்து செயல்படவேண்டும். த.மா.காவில் உள்கட்சி மோதல் கடுமையாகஇருப்பதாக குறை கூறுகிறார்கள்.
எந்தக் கட்சியில் தான் கருத்து வேறுபாடு இல்லை. முன்னர் காந்தி- காமராஜர் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பொது நலத்துக்காக அத்தகையகருத்து வேறு பாடு இருந்தது. இன்று சுயநலத்திற்காக கருத்து வேறுபாடு அதிகரித்து விட்டது.
கருத்து வேறுபாடு களையப்பட வேண்டும். தி.மு.க, த.மா.கா கூட்டணி ஏற்பட முழு முயற்சியில் ஈடுபடுகின்றேன். இது தான் எனது அடுத்தகட்டநடவடிக்கை. இவ்வாறு நிருபர்களிடம் கூறினார்.