அயோத்தி கோவில் ஒரு தேசிய உணர்வு: வாஜ்பாய்
டெல்லி:
அயோத்தியில் கோவில் கட்டுவது ஒரு முடிக்கப்படாத பணியாகும். அங்கு கோவில் கட்டுவது என்பது ஒரு தேசிய உணர்வாகும் என பிரதமர் வாஜ்பாய்நாடாளுமன்றத்தின் வெளியே புதன்கிழமை நிருபர்களிடம் கூறினார்.
இதனால் பெரும் அரசியல் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வந்தாலும், தன்னை ஒருமதச்சார்பற்றவராகவே காட்டி வந்தார் வாஜ்பாய்.
இதனால்தான் அவரை கருணாநிதி, ஜார்ஜ் பெர்னான்டஸ், மம்தா பானர்ஜி போன்ற மதசார்பற்ற அரசியல் பிரிவினரும் ஆதரித்தனர். இப்போது பிரதமரின்இந்தப் பேச்சுக்கு கருணாநிதி, பெர்னான்டஸ் போன்றவர்களும் பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று அத்வானி உள்பட மத்திய அமைச்சர்கள் 3 பேர் பதவி விலக வேண்டும் என்றஎதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.
அயோத்தியில் கோவில் இடிக்கப்பட்டதற்கு அத்வானி காரணமல்ல. கோவிலை இடிக்க வேண்டாம் என்றுதான் அத்வானி கூறி வந்தார்.
இப்பிரச்சனையில் தங்களது கோபத்தைக் காட்டுவதற்காகத்தான் அங்கு அத்வானியும், மற்றவர்களும் கூடினர். ஆனால் கர சேவகர்களை அவர்களால்தடுத்து நிறுத்த முடியவில்லை. இதில் அவர்களது தவறு ஏதுமில்லை.
அதே போல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது இன்னும் முடிக்கப்படாத பணி. அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்தியாவில்வாழும் அனைத்து மக்களின் விருப்பமாகும் என்றார் வாஜ்பாய்.
1992 ம் வருடம் இதே தினத்தில் தான் ( டிசம்பர் 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மதக் கலவரம் வெடித்தது.
மசூதி இடிக்கப்பட்ட இதே தினத்தில் வாஜ்பாய் பேசியுள்ள இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications