வீரப்பனைப் பிடிக்க 1,000 எல்லைப் பாதுகாப்பு படையினர் வருகை
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படைக்கு உதவுவதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 1000 பேர் வெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார்கள்.
தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனை சத்தியமங்கலம் தாளவாடி காட்டுப்பகுதியில் இருமாநிலங்களின் கூட்டு அதிரடிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
தேடுதல் வேட்டை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, தமிழகம் மற்றும் கர்நாடக போலீஸாருடன், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வீரப்பனைத் தேடும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக 1000 எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார்கள். எல்லைப் பாதுகாப்புப் படையில் கமாண்டோ குழுவினரும்உள்ளனர். அவர்கள் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பணியாற்றி வருகிறார்கள்.
இம்பாலிலிருந்து அவர்கள் பெங்களூருக்கு விமானம் மூலம் வந்திறங்குகிறார்கள். பின்னர் அவர்கள் இங்கிருந்து கர்நாடக போலீஸாருடன் சத்யமங்கலம்காட்டுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.












Click it and Unblock the Notifications