ரூ.1 கோடி கடத்தல் கம்ப்யூட்டர் பாகங்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை துறைமுகத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் கம்யூட்டர் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள கம்யூட்டர் பாகங்களைஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி காணாமல் போனது.
அதை டிரைவரோ அல்லது யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என்று லாரியின் உரிமையாளர் பாலசுந்தரம்துறைமுகம் போலீஸில் புகார் செய்திருந்தார். கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இது தொடர்பாக தேனாம்பேட்டை கணேசபுரத்தைச் சேர்ந்த ராஜ், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கருப்புராஜ், கோபி, நாகலாபுரத்தைச் சேர்ந்த ரவி உள்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
கடத்திய கம்ப்யூட்டர் பாகங்களில் சிலவற்றை அவர்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பைக்கும் வாங்கியுள்ளனர்.
போலீஸார் அந்த பைக்கையும், மீதமுள்ள கம்யூட்டர் பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications