துபாயில் இந்தியப் புலித்தோல்கள் பகிரங்க விற்பனை
துபாய்:
துபாயில் இந்திய புலித்தோல்கள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்ரன.
ஐக்கிய அரபு நாடுகளில் புலித்தோல்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் அங்கு புலித்தோல்கள் மிகவும் பகிரங்கமாக விற்பனைசெய்யப்படுகின்றன.
வங்காளத்தைச் சேர்ந்த புலிகளின் தோல்கள் மற்றும் இதர விலங்குகளின் தோல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மிகக் குறைந்த விலையிலேயேஇவை கிடைக்கின்றன.
இது தவிர பூனைகள், பாம்புகள் ஆகியவற்றின் தோல்களும் விற்ப செய்யப்படுகின்றன.
இவற்றை வாங்குவதற்கு உலக அளவில் மக்களிடையே கடும் போட்டியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து இளம் புலிகள் மற்றும் பெரிய புலிகளுக்குத் தகுந்தவாறு விலையும் நிர்ணயிக்கப்படுகின்றன. பிறந்து 5 மாதமே ஆன புலிகளின்தோல்கள 600 திராம்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சுற்றுப்புறச்சூழல் ஆராய்ச்சிப் பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்த வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 100 புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனஎன்று தெரியவந்துள்ளது. மேலும் புலிகள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புலிகளின் தோல்கள் கிடைத்துவிடுகின்றன. அவை உடனடியாக விற்பனையாகிவிடுகின்றன என்கிறார் ஒருகடைக்காரர்.
இந்தியாவில் 1900ம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. ஆனால் அவைகள் கொல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்யப்படுவதால் தற்போது 2,500 க்கும் குறைவாகவே புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.